Puranaanotru Poongavilrundhu (புறநானூற்றுப் பூங்காவிலிருந்து)
அமெரிக்காவில் வாழும் அறிஞர் இர.பிரபாகரன் பல ஆண்டுகளாக இடையறாது செய்துவரும் தமிழ்ப்பணி அரியது, பெரும் பாராட்டுக்குறியது. அவருடைய தமிழ், ஆங்கில மொழிப்புலமையும், இலக்கியத்தோடு பிறதுறை அறிவும், அமெரிக்க வாழ்க்கையின் பின்புலமும் இம்மாபெரும் பங்களிப்புக்குத் துணைசெய்துள்ளன. பிரபாகரனின் நாடகங்கள் தமிழகத்தில் புலவரும் புரவலரும் வாழ்ந்த வாழ்க்கையின் மேம்பாட்டையும் தமிழினத்தின் வரலாற்றையொத்த வரலாறு உலகில் வேறு எந்த இனத்திற்கும் இல்லையென்பதை அனைவருக்கும் புலப்படுத்தும் என்பது உறுதி. எனவே இப்பெரும் பெயர்க்குரிய அமெரிக்கத் தமிழரைப் போற்றி ஊக்குவிப்பது உலகெங்குமுள்ள தமிழார்வலர்களின் பொறுப்பாகும்.
பேரா. ப. மருதநாயகம்
பேராசிரியர் மற்றும் செம்மொழி நிறுவனத்தின் மேனாள் ஆய்வறிஞர்
துணைத்தலைவர், உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றம்