என் வானெங்கும் அவளின் பிம்பம் ( En Vaanengum Aval bimbam)
நாயகியின் கல்லூரி காலம்… குறிப்பிட்ட ஒரு இடத்தில் பிரச்சனையில் மாட்டிக் கொள்ளும் நாயகனும் நாயகியும் அவ்விடத்திலிருந்து பாதுகாப்பாகத் தப்பி வர.. இருவரையும் சந்தேக பட்டு பேசும் பெற்றோர்கள்….. தங்கள் துறையில் சாதிக்கத் துடிக்கும் நாயகனும் நாயகியும் அவர்கள் வாழ்க்கையில் சாதிக்கிறார்களா…? இல்லை பெற்றோர் பேச்சுக்கு மனமுடைந்து போகிறார்களா…? வாழ்க்கையில் நமக்கு இருக்கும் லட்சியத்தின் முக்கியத்துவத்தை மறந்து…. மற்றவர் பேச்சில் உடைந்து போகாமல் எப்படி சாதிக்கிறோம் வாழ்க்கையில் என்பது தான் முக்கியம்….மற்றவர்கள் பேசுவதில் மனம் உடைந்து போனால் வாழ்க்கை என்பது கேள்விக் குறியாகி விடும் சொல்லாத காதல் எல்லாம் சொர்க்கத்தில் சேராது என்று சொல்லுவார்கள்… இங்கும் சொல்லப்படாத ஒரு காதல்தான் எப்படி சேருகிறது என்பதை சொல்கிறது கதை… உண்மை காதல் எங்கிருந்தாலும் எத்தனை வருடங்கள் கடந்தாலும் சேரும்…