என் எழுத்து இகழேல் ( En Ezhuthu Egazheal)
கவிதை எழுதுவது முக்கியம் அல்ல; கருத்துடன் எழுத வேண்டும். சொற்களை இணைத்து சுவையாக எழுதுவது மட்டும் கவிதை அல்ல! சுவையோடு அவையேற்கும் அருங்கருத்துக்களும் அங்கே அமர்ந்திட எழுத வேண்டும், அதுதான் கவிதை. அதனை எங்கள் சிலேடை சித்தர் சேது சுப்பிரமணியம் அவர்கள் தன்னுடைய கன்னிக் கவிதைத் தொகுப்பு முயற்சியிலேயே காட்டி இருக்கிறார் என்பதே என் மனக் கருத்தாகும். அவரின் இக்கவிதை முயற்சி மேலும் சிறக்கட்டும்.